இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு

70.00

முஸ்லிம்கள் எப்படி ஒற்றுமையாகுவது? அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடுகளை எப்படித் தீர்த்துக்கொள்வது? அவர்களின் கொள்கைகளுக்கான மூல ஆதாரங்கள் எவை என்பதை விளக்கி அவர்களுக்குள் இருக்கும் பிரிவினைகளைப் போக்குவதற்கான அழைப்பை முன்வைக்கும் நூல் இது.

SKU: KV062 Category:

Description

முஸ்லிம்களிடையே கடந்த காலத்தில் உருவாகிய பிரிவுகளால் காலங்காலமாக இருந்துவரும் கருத்துமோதல்களுக்கும், தற்காலத்தில் தோன்றியுள்ள பிணக்குகளுக்கும் ஒரே காரணமாக நான் நம்புவது, இவர்கள் அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹைப் பின்பற்றுகிற மூன்றாவது விசயத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதுதான்.

ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாக வாதிக்கிறார்கள். இவர்களின் பேச்சுகளைக் கேட்கும் இளைஞர்கள் குழம்பிப் போகிறார்கள். ‘சகோதரரே! இந்தக் கூட்டமும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாகச் சொல்கிறது; அவர்களும் குர்ஆன், ஹதீஸையே பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள்..’ எனத் தடுமாறுகிறார்கள்.

யார் சொல்வது உண்மை? எப்படி அதைத் தெளிவாகப் பிரித்தறிவது? இதற்குத்தான் குர்ஆன், நபிவழி, அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ் வழிமுறை இருக்கிறது. ஒருவர் அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ் ஆகிய நபித்தோழர்களையும் அவர்களைப் பின்பற்றிய நல்லோர்களையும் பின்பற்றாமல், குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றினால், நிச்சயமாக அவர் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றவேமாட்டார். மாறாக, தன் சுய அறிவையும் மனஇச்சையையுமே பின்பற்றுவார்.

– இமாமவர்களின் வரிகள் சில.

Additional information

Weight .1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு”

Your email address will not be published. Required fields are marked *